இறைவேண்டல்

Gershom Chelliah

04:23 (0 minutes ago)

prayer-mother-teresa.jpg

இறைவேண்டல் ஏறெடுப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:15-16.
15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
கூட்டாய், குழுவாய் வேண்டுதல் நன்று;
குடும்பம் இணைந்து கேட்பதும் நன்று.
பாட்டாய்ப் பாடி படைத்தலும் நன்று;
பன்முறை நாளில் தனித்தலும் நன்று.
ஆட்டம் போட்டு கேட்பது அன்று,
ஆண்டவர் விருப்பை அறிவோம் இன்று.
பூட்டைத் திறக்கும் கோலைப் போன்று,
புனிதரின் ஆவியில் கேட்பதே நன்று!
ஆமென்.

Leave a Reply