இறைவா எனை நீ ஆளவேண்டும்!
உண்மை மட்டும் பேச வேண்டும்;
ஒழுக்கத்தில் நான் வாழ வேண்டும்.
நன்மை செய்யும் நெஞ்சு வேண்டும்;
நாட்டோருக்கு உதவ வேண்டும்.
விண்ணை முட்டும் அன்பு வேண்டும்;
விடுதலை ஈயும் வீரம் வேண்டும்.
எண்ணம் எதிலும் தூய்மை வேண்டும்;
இறைவா எனை நீ ஆளவேண்டும்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://fb-s-b-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/p480x480/24294010_1660077667356362_4285773178614710433_n.jpg?oh=af6b7c21b1ce0d58994576414b7ec587&oe=5AC8B48B&__gda__=1520176933_a500284535d0b628cbe9b0fbe2665baf)