இறைவழி!
இருக்கும் இடத்தை ஏதேனாக்கும்
எளிய தொண்டில் இறை பாரும்.
செருக்கும் வெறுப்பும் தீங்குருவாக்கும்.
செய்ய மறுப்பின் குறை தீரும்.
பெருக்கும் ஊற்றாய் அன்பு சுரக்கும்
பெருந் தன்மையே இறையாகும்.
நெருக்கும் தொல்லை தருவோருக்கும்,
நேர்மைப் பரிசே, முறையாகும்!
-கெர்சோம் செல்லையா.