இறைவனுக்குரியதை இறைவனுக்கு…
நற்செய்தி மாலை: மாற்கு14:3-5.
“இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, ‘ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.”
நற்செய்தி மலர்:
குறைவறக் கொடுக்கும் இறைவன் கேட்டால்,
கொடுப்பது எங்ஙனம் என்போரே,
உறைவிடம் இன்றி, ஊண் உடையின்றி,
ஒதுங்குவோர்க்களித்தல் என்பீரே.
நிறைவுறக் கொடுத்தும், நிரம்பக் கேட்கும்
நெஞ்சம் கொண்ட அன்போரே,
இறைவனுக்குரியதை இறைவனுக்களித்தல்,
இன்று நம் கடன் என்பீரே!
ஆமென்.
![Image may contain: 1 person, text](https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16507826_1362211727142959_7890385936080049146_n.jpg?oh=af6fdea8805e643f2ab351811c98fb3b&oe=59000CD4)