இறைப்பணியில் பெண்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:2-3.
2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
எந்த பணியை யாருக்கென்று,
இறைமகன் அறிந்து பணி கொடுத்தார்.
அந்த வகையில் ஆணுக்கிணையாய்
அன்னையர் கன்னியர் பணி எடுத்தார்.
இந்த நாளிலும் இயேசுவின் வழியில்,
இறைப்பணி பெண்கள் செய்கின்றார்.
சொந்த நலனைத் துறந்து ஆற்றும்,
தூயருக்கிரங்குவோர் உய்கின்றார்!
ஆமென்.
![Image may contain: 3 people, baby](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/49561063_2163295627034561_3577313024303693824_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=472c49594c8734629729e0bc9a98f4d6&oe=5C8F65D2)