இறந்தவன் எழுந்து வந்தாலும் ஏற்பதில்லை!

இறந்தவன் எழுந்து வந்தாலும் ஏற்பதில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:27-28.

27  அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

28  நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

செத்தவன் சொன்னதும் கேட்டதில்லை.

செத்துப் பிழைப்பினும் பார்ப்பதில்லை.

சித்து விளையாட்டிவை தேவையில்லை.

சிந்திக்கவே எனக்கு நேரமில்லை.

இத்தரை மாந்தரில் பெரும்பாலோர்,

இப்படி நினைப்பதில் வியப்புமில்லை.

மொத்தமும் போகும் நாள்வரையில்,

மீட்பரைச் சொல்வதில் பயனுமில்லை!

ஆமென்.

Leave a Reply