இரண்டு பேர்க்கு ஊழியமா?

இரண்டு பேர்க்கு ஊழியமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:13-14.

13  எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

14  இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

இருவர் அமர்ந்து என்மேல் ஆண்டால்,

யார் சொல் கேட்டுப் பிழைத்திடுவேன்?

ஒருவர் பேச்சும் இரண்டாய் இருந்தால்,

உண்மையில் எப்படி உழைத்திடுவேன்?

அருமை வாழ்க்கை ஒருமுறை என்றால்,

அதனை எப்படி வாழ்ந்திடுவேன்?

விருப்பம் ஓன்று இறையென்றானால்,

விண்ணின் வாக்கில் ஆழ்ந்திடுவேன்!

ஆமென்.

Leave a Reply