இரங்கும் வாக்கு!

இரங்கும் வாக்கு!
நற்செய்தி: யோவான் 6:7.
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
நல்வழி:
உண்டு, தூங்கி, ஊரில் சுற்றி,
உழைத்தோம் என்று கூறும் நாம்,
கண்டு, வாங்கிச் சேர்த்தது பற்றி,
கதை கட்டுரைகள் சொன்னோமே.
பண்டு நாமும் பசியால் வற்றி,
படுத்து ஏங்கிக் கிடந்தது போல்,
ஒண்டு மனிதர் இருப்பது மாற்றி,
உதவி புரியச் சொன்னோமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply