இரக்கம் என்பது இறைவனின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:35-36.
35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் என்பது, இறைவனின் பண்பு;
இயேசுவில் கண்டேன், இந்த அன்பு.
அரக்கர் என்று, அகற்றுதல் தப்பு;
அனைவரும் இறையின் சாயல் படைப்பு.
சிறக்கும் இந்த தன்மை கொண்டு,
செயல்படுவோர்க்கு வாழ்வு உண்டு.
உருக்கம் பெருக, ஊழியம் பண்ணு;
உள்ளில் அன்பு, இலையேல் மண்ணு.
ஆமென்.
![Image may contain: 1 person, sitting, outdoor and water](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/46458662_2094358587261599_6310552923541602304_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=7d9a10e6c220ed7b2e96869bec3c363c&oe=5C7A8F04)