இயேசுவாக மாறுவோம்!
உண்மை இறைவன் நமைப் படைத்தாரே;
உடல் பொருள் ஆவியில் அறிவடைத்தாரே.
அன்பாய் வாழும் வழி கொடுத்தாரே;
அறம் விட்டவரோ, பழி எடுத்தாரே.
மண்ணில் மகனாய், இறை பிறந்தாரே;
மன்னிப்பென்னும் அருள் திறந்தாரே.
என்னே அன்பென இதை நினைப்பாரே,
இயேசுவாக, இறை இணைப்பாரே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
24, செயலகக் குடியிருப்பு, இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,சென்னை-600099.