இடுக்கமான வாசல்!

இடுக்கமான வாசல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:22-24.

22அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.
23அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
ஒடுக்கும் மனிதர் கெடுக்கும் நாளில்,
உண்மை எங்கே ஒளித்திருக்கும்?
இடுக்கம் என்ற வாசலைப் பாரும்;
இதனுள் மீட்பாய் விழித்திருக்கும்.
நடுக்கம் தந்தோர் வழியும் பாரும்;
நால்வழிச் சாலைபோல் விரிந்திருக்கும்.
தடுக்கும் காவல் அடுத்தே இருக்கும்;
தண்டனைத் தீர்ப்பில் தெரிந்திருக்கும்!
ஆமென்.






Leave a Reply