![No automatic alt text available.](https://fb-s-c-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/p526x296/19756382_1516824891681641_3157245496737716288_n.jpg?oh=361a913038da495ce112041eaaf2a4cd&oe=59CFA0FE&__gda__=1506201936_e4c22064d3ff1dc7363856cd332cfd91)
ஆவியில் நிறைந்தவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:15.
15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.”
கிறித்துவில் வாழ்வு:
ஊனுடல் உள்ளோர் இறைமுன் நின்று,
உயர்ந்தோர் தாமென உரைப்பாரோ?
வானுயர் நேர்மை கொண்டோர் என்று,
வாயினில் வாக்கும் நிறைப்பாரோ?
மானுடர் எவரும் கூறிடமாட்டார்.
மனிதர் தகுதியில் குறைந்திட்டார்.
நாணிடும் நம்முன் யோவான் நின்றார்;
நல்லாவியரால் நிறைந்திட்டார்!
ஆமென்.