ஆழக் கடலில் அமிழும்போதும்!

ஆழக் கடலில் அமிழும்போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:22-25.

22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
ஆழக் கடலில் அமிழும்போதும்,
ஆண்டவரோடுதான் அமிழ்கின்றோம்.
தாழக் குதித்துத் தப்பும்போதும்,
தந்தை அருளிலே தப்புகின்றோம்.
வாழக் கரையில் வரும்போதும் நாம்,,
வல்லவரோடுதான் வருகின்றோம்.
வீழ விடாமல் காக்கும் இறையால்,
வீணாகாது வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

Image may contain: ocean, sky, mountain, outdoor, water and nature

Leave a Reply