ஆண்டவருக்கே அறிவுரையா?

ஆண்டவருக்கே அறிவுரையா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:31-33.
” மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ‘ என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ‘ என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ‘என்று கடிந்துகொண்டார்.”

நற்செய்தி மலர்;
ஆண்டவருக்கே அறிவுரை கூறும்
அளவில் கிறித்தவர் நடக்கின்றார்!
அதனால்தானே ஊழியர் இன்று,
ஆணவம் கொண்டு கிடக்கின்றார்!
வேண்டுவோரின் வெறுமை காணும்,
வேந்தன் பற்றையும் பார்க்கின்றார்.
வெற்றியுள்ள வாழ்வும் ஈந்து,
விண்ணின் அரசில் சேர்க்கின்றார்!
ஆமென்.

Leave a Reply