அழியாதது!

அழிவதும், அழியாததும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:32-33.  

32  இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

33  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.




கிறித்துவில் வாழ்வு:   

ஊன் அழியும், உடல் அழியும்;  

உலகப் பொருட்களும் அழியும். 

வான் அழியும், வாய்ப்பழியும்;  

வந்து நிற்பதெல்லாம் அழியும். 

தேன் ஒழுகும், திருச்சொல்லருளும்,  

தெய்வமொன்றே நிலைத்திருக்க,    

நான் இனிமேல்  நாடிடுவேன்;  

நல்லிறையும் அவர் வழியும்!  

ஆமென்.  

-செல்லையா. 
 

Leave a Reply