அலகை பிடித்தவரும், உலகைப் பிடிப்பவரும்!

அலகை பிடித்தவரும், உலகைப் பிடிப்பவரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:33:35.
33 ஜெபஆலயத்திலே அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
35 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

கிறித்துவில் வாழ்வு:
அலகை பிடிக்க, ஆடுவாருண்டு.
ஆண்டவர் அதட்ட, விடுவாருண்டு.
உலகைப் பிடிக்க, ஒடுவாருண்டு.
உணர்ந்து, இறையைத் தொடுவாருண்டு.
நிலைமை இதுவே, காண்பீர் என்று,
நெஞ்சம் தாழ்த்திக் கேட்பேன் இன்று.
புலவன் பேச்சு பொய்மை அன்று;
புனிதர் ஏசுவின் வழியே நன்று!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Leave a Reply