அலகை அறியும், அடுத்தவரோ அறியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:41.
41 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
கிறித்துவில் வாழ்வு:
யாருக்கு நன்மை செய்தோமோ,
அவரும் நம்மைப் புரிவதில்லை!
போருக்கு வந்திடும் எதிரியுமோ,
புரிந்தும், நன்மையைத் தெரிவதில்லை!
பாருக்கு மீட்பைப் பகிர்ந்தளிக்கும்,
படைத்தோன் மகனுக்கே இந்த நிலை!
நீருக்குக் குமிழியாயிருக்கும்,
நிலையிலா எனக்கேன் வீண் கவலை?
ஆமென்.
![Image may contain: 1 person](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/43278179_2031552353542223_3752967669062565888_n.jpg?_nc_cat=104&oh=43fb1e2893e6c3388e1f44721c7d3c44&oe=5C5A0AD4)