அறுவடை!

அறுவடை மிகுதி!

நற்செய்தி: யோவான் 4:35.

35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

நான்கு திங்கள் அறுக்காது,

நல்விளைச்சல் விடுவாரோ?

தூங்குபவரை ஒறுக்காது,

தொழிலிழந்து கெடுவாரோ?

தேங்கு மந்தம் பொறுக்காது,

திருமறையை எடுப்போமே.

ஏங்குகின்றார் இறைமகனார்;

இன்தொண்டிற்கு நடப்போமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply