அறுபத்தெட்டு!

அறுபத்தெட்டு ஆண்டுகள்!

உருவாய் வாழும் ஆண்டை எண்ணி,
ஊரார் அளப்பின், அறுபத்தெட்டாம்.
கருவாய் இருந்த காலமும் எண்ணி,
கணக்குப் பார்ப்பின் அருள் திரட்டாம்.
எருவாய் என்றோ போகவிடாமல்,
என்னைக் காப்பதோ இறைக் கூட்டாம்.
திருவாய் மொழியும் தெய்வ அன்பால்,
தொடர வைப்பதும் அவர் பொருட்டாம்!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply