அறநூல் கற்றும்!

அறநூல் கற்றும் அறிவில்லை!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:1-2.  
1   பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.

2   அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அறவழி நூற்கள் ஆய்ந்து கற்றும்,  

அன்பில்லாரில் நிறைவில்லை. 

திறமை துணிவு மிகுந்து பெற்றும்,  

தீச்செயலுக்கும் குறைவில்லை.  

துறவியரென்று தோற்றமுற்றும்,   

துன்புறுத்தின் முறையில்லை. 

புறவடிவத்தில் மயங்கி போற்றும்,  

புவியோரிடமும் இறையில்லை!  

ஆமென்.  

-செல்லையா. 

Leave a Reply