அறநூல் கற்றும் அறிவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:1-2.
1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அறவழி நூற்கள் ஆய்ந்து கற்றும்,
அன்பில்லாரில் நிறைவில்லை.
திறமை துணிவு மிகுந்து பெற்றும்,
தீச்செயலுக்கும் குறைவில்லை.
துறவியரென்று தோற்றமுற்றும்,
துன்புறுத்தின் முறையில்லை.
புறவடிவத்தில் மயங்கி போற்றும்,
புவியோரிடமும் இறையில்லை!
ஆமென்.
-செல்லையா.