அறத்தின் பேரரசர்!

அறத்தின் பேரரசர்!
நற்செய்தி மாலை: மாற்கு: 15:1-2.
“பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்க அவர், ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று பதில் கூறினார்.”
நற்செய்தி மலர்:
அடிமைக் கோலம் எடுத்தவராயினும்,
அவர்தான் அறத்தின் பேரரசர்.
கொடியோர் வெறியில் கட்டியிழுத்தும்,
குறையேயில்லா நேரரசர்.
விடியுங்காலம் நீளும் எனினும்,
விரைவில் வருவார் விண்ணரசர்.
தடியும் வாளும் எடுப்பவர் விழுவார்;
தரணியை ஆள்வார் என்னரசர்!
ஆமென்

Leave a Reply