அன்பைப் பகிர்வதே வாழ்க்கை!

அன்பைப் பகிர்வதே வாழ்க்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:1-2.
1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டம் போட்டுச் சடங்குகள் செய்வார்;
சாகா வழியெனச் சாக்குரைப்பார்.
திட்டம் போட்டுத் தீமையும் செய்வார்;
தெய்வ விருப்பெனப் போக்குரைப்பார்.
முட்டாட்தனத்தைச் சட்டம் ஆக்க,
மும்மை தெய்வம் மனிதனில்லை.
கிட்டும் அன்பைப் பகிர்வது வாழ்க்கை;
கேளாவிட்டால், இனிமையில்லை!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply