அன்பில் அமிழ்வோம்!
நற்செய்தி: யோவான் 3:22-23.
நல்வழி:
இப்படி இப்படி இருக்கவேண்டும்,
என்று சடங்கை விளக்கும் நாம்,
அப்படி அப்படி குறைவற்றிருக்க,
அன்புள் மூழ்கி எழுந்தோமா?
தப்படி தப்படி இது என்றுரைத்து,
தண்ணீர் ஆழம் அளக்கும் நாம்,
எப்படி எப்படி வாழ வேண்டும்,
என்கிற ஆவியில் எழுவோமா?
ஆமென்.
-செல்லையா.