அதிசயமானவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:9-13.
9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
கிறித்துவில் வாழ்வு:
அதிசயம் என்ற சொல்லிற்கு,
ஆட்சியாளர் இறைமகனார்.
பதிலைக் கேட்கும் வேண்டலுக்குப்
பரிசாய்த் தருகிறார் நிறைமகனார்.
சோதனை ஐயம் கொள்ளாது,
சொந்தம் என்றே நம்பிடுவீர்.
மேதினி அறியா அதிசயத்தை,
மேலும் செய்வார், கும்பிடுவீர்.
ஆமென்.
![Image may contain: sky, cloud, twilight, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/40463914_1990521570978635_5451046645246459904_n.jpg?_nc_cat=0&oh=88e7124d8ac53a22d139545da1734dd2&oe=5C2B9DBA)