அடிமையின் தாழ்வில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:46-48.
46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அடிமையாய்க் கிடப்போரையும்
அன்புடன் பார்ப்பவர் யார்?
கடினமாய் நடத்துவோரும்
கனிந்திடச் சேர்ப்பவர் யார்?
முடிவிலா நன்மை ஈந்து
முற்றிலுமாய் மீட்பவர் யார்?
பிடிபடா என்னைப் பிடித்த
பேரரசர் இறைமகனார்!
ஆமென்.
![Image may contain: cloud and sky](https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p280x280/21766585_1594985400532256_6193762248362760605_n.jpg?oh=bdffad6a6702016d1e96d20ae996abae&oe=5A5214C7)