எந்த நீரால் நீக்கிடலாம்?

நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
“யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.”

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:5. 
"யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்."

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ‘ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.”

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம்
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்."

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம் 
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 28:19-20.
“எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
எல்லா மனிதரும் இறையுருவே;
எந்நிலை இருப்பினும் நம்முறவே.
பொல்லாத் தீமை விட்டிடவே,
புனிதனின் செய்தி உரைப்போமே.
கல்லார் கற்றுத் தெளிவுறவே,
கடவுளின் அரசு அமைந்திடுமே.
நல்லார் கூட்டம் பெருகிடவே,
நன்மை ஆறாய்ப் பாய்ந்திடுமே!
ஆமென்.
 

விண்ணை ஆளும் இறைமகனே!

விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
“பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.”
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில்
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.

விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
"பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்."
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில் 
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.
LikeLike ·  ·

உறங்குகையில் தெரிந்திடுமா?

உறங்குகையில் தெரிந்திடுமா?
நல்வாக்கு: மத்தேயு 28:11-15.
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:
“அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ‘ நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ‘ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.”

நல்வாழ்வு:
உறங்கும்போது எடுத்தாரென்றால்,
உணர்வில் எடுப்பதைத் தெரிந்தாரோ?
இறங்கி வந்து அடியார் எடுத்தால்,
எடுப்பதைத் தடுக்க மறந்தாரோ?

திறனில்லாது ஓடி ஒளிந்தோர்
தெரிந்தே படைமுன் எடுப்பாரோ?
புறம் கூறிடுவார் பொய்களிலெல்லாம்,
பொருத்தம் இல்லை, அறிவீரோ?
ஆமென்.

உறங்குகையில் தெரிந்திடுமா?<br />
நல்வாக்கு: மத்தேயு 28:11-15.<br />
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:<br />
"அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ' நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ' எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது."</p>
<p>நல்வாழ்வு:<br />
உறங்கும்போது எடுத்தாரென்றால்,<br />
உறங்குகையில் தெரிந்திடுமா?<br />
இறங்கிய கூட்டம் எடுக்கும்போது,<br />
இதைத்தடுக்க மறுத்திடுமா?<br />
திறனில்லாத மனிதர் என்றுத்<br />
தம்மை வீரர் குறைப்பாரா?<br />
அறம் தெரிந்த நண்பர் நீரும்,<br />
அதையறிந்து உரைப்பீரா?<br />
ஆமென்.
LikeLike ·  · Share

இறப்பை வென்ற இறைமகன்!

இறப்பை வென்ற இறைமகன்!

நல்வாக்கு: மத்தேயு:28:10.
“அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘ அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,
இனிமேல் நமக்கேன் அச்சம்?
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.
உறக்கம் விட்டு எழுவது போன்று,
ஒருநாள் நாமும் எழுவோம்.
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!
ஆமென்.

இறப்பை வென்ற இறைமகன்!<br />
நல்வாக்கு: மத்தேயு:28:10.<br />
"அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார்."</p>
<p>நல்வாழ்வு:<br />
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,<br />
இனிமேல் நமக்கேன் அச்சம்?<br />
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,<br />
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.<br />
உறக்கம் விட்டு எழுவது போன்று,<br />
ஒருநாள் நாமும் எழுவோம்.<br />
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,<br />
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, ‘இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்’ என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
“முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்….. அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!”

“…சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.”(1 பேதுரு 3:6).

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, 'இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்' என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
"முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்..... அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!"

"...சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்."(1 பேதுரு 3:6).

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
“அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.”

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை,
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த,
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட மறுத்து, தலைவனை வெறுத்து,
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு
அப்படி எழுதல், காணுங்களே!
ஆமென்.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
"அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்."

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை, 
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த, 
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட  மறுத்து, தலைவனை வெறுத்து,  
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு 
அப்படி  எழுதல், காணுங்களே!
ஆமென்.
LikeLike ·  · Share

எழுந்தவரைக் காண்பீர்கள்!

எழுந்தவரைக் காண்பீர்கள்!
நல்வாக்கு: மத்தேயு 28:7
“நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.’
நல்வாழ்வு:
எழுந்தவரைக் காண்பீர்கள்;
இனியோரே பாருங்கள்.
அழுந்தும் சுமை நீங்கும்;
ஆண்டவருள் வாருங்கள்.
விழுந்தவர்கள் எழுந்தின்று
வெற்றி கொள்வதுபோல்,
தொழுதுள்ளில் பெறுவீர்கள்;
தூயவரைச் சேருங்கள்!
ஆமென்.

கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!

கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
“ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘ நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.”
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.
Photo: கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
"ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்."
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.