நொந்து பிள்ளை பெற்றிடும் போது
நகைத்த சாறாள் தொண்ணூறு.
எந்த நிலையிலும் இறை பார்க்கின்ற,
ஆபிரகாமோ ஒரு நூறு.
உந்து வலிமை இறை தரும் போது,
வந்து பார்த்து நண்பா நம்பு.
வளம் கொடுக்கும், அருள் ஆறு!
(தொடக்கநூல் 21:1-7)
The Truth Will Make You Free
ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,
ஆண்டவர் சொன்னது வரவில்லை.
வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,
விரும்பும் ஆபிராம் பெறவில்லை.
தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும்,
தருகின்ற இறையும் தரவில்லை.
ஏன்டா இப்படி, என்றே சொன்னோம்!
இப் பொறுமையிழத்தல் அறமில்லை!
(தொடக்கநூல் 17)
4. மீட்பின் திட்டம்!
பேர் புகழ் தேடிச் செல்வது சிறப்பா?
பேரிறை வழங்க, பெறுவது சிறப்பா?
யார் இதைப் புரிந்து நடக்கின்றாரோ,
ஊர் எனும் ஊரில் ஒருவர் இருந்தார்.
உள்ளம் முழுதும் பற்றாயிருந்தார்.
பார் படைத்தாளும் இறை அழைத்தார்;
பணிந்து ஆபிராம் கீழ்ப்படிந்தார்.
(தொடக்க நூல் 12:1-4).