பிறக்கச் செய்பவர் இறைவனாதலால்,

பிறப்போர் எவரும் இறை மக்கள்.

உறவுக் கூட்டில் முன் பின் உண்டு.

ஒவ்வொரு இனமும் அவர் மக்கள்.

இறை வாழ்வென்னும் மீட்பு சொல்லும்,

ஏற்பாட்டில் யார் முதல் மக்கள்?

அறத்தின் திட்டம், ஆண்டவர் சட்டம்,

அடைந்த இசரயெல் மக்கள்!

(விடுதலைப் பயணம் 19 & 20).

May be an image of text

பாலை நிலம் வழி செல்லும் நாளில், 

பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,

காலை தொட்டு மாலை வரையில், 

கடுஞ்சினத்துடன் தேடினார்.

கோலை எடுத்து மோசே அடிக்க, 

கொடுக்கும் பாறை கிறித்துவால்,

நாளை உயிர் நீர்  நாமும் பெறுவோம்;

நம்பாதவர்தான் வாடினார்!

(விடுதலைப் பயணம் 17:1-7).

மிகுதியாய்ப் பலபேர் ஓடி எடுத்தும்,

மீதியாய் மன்னா நிரப்பவில்லை.

பகுதியில் கொஞ்சம் கை பிடித்தும்,

பசித்து, குறைவென இரக்கவில்லை.

தகுதியும் பண்பும் பலவாயிருந்தும்,

தருவதில் வேறு படவில்லை.

யகுவா போதும், என்று திருந்தும்,

எவரையும் கை விடவில்லை!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of stone-fruit tree and text that says 'Whoever gathered much had nothing left over, and whoever gathered little had no lack. lillieamma.com 2 Corinthians 8:15'

நீண்ட நெடிய பயணம் செல்ல,

நீங்களும் நானும் எண்ணின்,

வேண்டுமளவு உணவு உண்ண,

வெளியாளையே நாடுவோம்.

ஆண்டவரோ அந்தக் காட்டில்,

அன்றாடம் அவர் உணவிற்கு,

தேன் இனிப்பின் மன்னா தந்தார்.

தெய்வத்தையே தேடுவோம்!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of text