பிறக்கச் செய்பவர் இறைவனாதலால்,
பிறப்போர் எவரும் இறை மக்கள்.
உறவுக் கூட்டில் முன் பின் உண்டு.
இறை வாழ்வென்னும் மீட்பு சொல்லும்,
ஏற்பாட்டில் யார் முதல் மக்கள்?
அறத்தின் திட்டம், ஆண்டவர் சட்டம்,
அடைந்த இசரயெல் மக்கள்!
(விடுதலைப் பயணம் 19 & 20).
The Truth Will Make You Free
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).