இருவேறு காட்சிகள்!

இருவேறு காட்சிகள்!
வாக்கு: யோவான் 11:20.

20. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.

வாழ்வு: 

இருவேறு காட்சி தருகிற பெண்கள்.
இயேசுவிற்கும் அன்புக் கண்கள். 
மார்த்தாள் அறிந்ததும் ஓடுகிறாள். 
மரியாள் அமர்ந்தே வாடுகிறாள். 
ஒருவரின் பற்றை அளக்கின்றவர்கள்,
ஒரே பக்கம் வளையாதிருங்கள்.
திருஅவையிலும் பன்னிலையாட்கள்.
தேவை இன்று நன்மையாளர்கள்!

ஆமென். 
-கெர்சோம் செல்லையா.