அன்று மரியாள் கண்டுரைத்தும்….

அன்று மரியாள் கண்டுரைத்தும்….
நற்செய்தி மாலை: மாற்கு 16:9-11.
“வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.”
நற்செய்தி மலர்:
அன்று மரியாள் கண்டுரைக்க,
அடியாரோ அதை நம்பவில்லை.
இன்று நாங்கள் நம்பியுரைக்க,
எதிரி தருவதோ அம்பு வில்லை!
சென்று போன நாட்களின் தவற்றைச்
சீர்செய்தாலோ வம்பு இல்லை.
என்று ஒருவர் நம்பவிலையோ,
அங்கு மெய்யும் அன்புமில்லை!
ஆமென்.

No automatic alt text available.