அற்புதம் கண்டும்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 8:19-21.

“ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று அவர் கேட்க, அவர்கள் ‘ பன்னிரண்டு ‘ என்றார்கள்.  ‘ ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று கேட்க, அவர்கள், ‘ ஏழு ‘ என்றார்கள்.  மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா? ‘ என்று கேட்டார்.”
நற்செய்தி மலர்:
அற்புதம் காண்கின்றோம்;
ஆயிரம் பெருக்கின்றோம்.
பொற்பரன் இயேசுவையோ, 
புரியா திருக்கின்றோம்
கற்பனை அல்ல இது;
கடவுளைப் பற்றிடுவோம்.
நற்செயல் செய்வதற்கே,
நற்செய்தி கற்றிடுவோம்!
ஆமென்.