பதி மூன்றாண்டுகள் அடிமைப் பட்டவர்,
பார்வோன் கனவால் விடுதலையானார்.
அதி உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்;
அனைவர் உண்ணும் நெடும்பயிரானார்.
எதிரெதிராகக் கெடுத்துக் கெட்டவர்,
இவர் முன் வந்தார், காலில் வீழ்ந்தார்.
மதி நிறை யோசப் மன்னிப்பளித்தார்.
மாந்தர் போற்ற நூலில் வாழ்ந்தார்!
(நைல் ஆற்றின் பாகர் யூசப் கால்வாய்/ “BAHR YUSSEF” யோசேப்பால் கட்டப்பட்டு, எகிப்து நாட்டைச் செழிக்க வைப்பதாக, வரலாறு சொல்கிறது.)
![No photo description available.](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/392879267_7472715522759185_4483385040514903187_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=wTitw-ARv0IAX_lHUy2&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfDc7eQFUi4Y5FaDSZfdg2J5wESpELiFPFoRmd0bFpy-1g&oe=65E68F44)