விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
“பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.”
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில்
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.
![விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
"பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்."
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில்
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10614275_849330638431073_4578737110805763624_n.jpg?oh=fd79aaa7f10eb371357dfe4ca9fba721&oe=54DFFF95&__gda__=1423336867_0412621578290aa25ee45db0dff85dc4)