விடுதலை நாள் வாழ்த்துகள்!
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம், குடியை விட்டிடுவோம்.
கெடுதலைக் கொணரும் வெறியத்தைக்
கீழே ஊற்றிக் கொட்டிடுவோம்.
எடுத்துரைக்கும் இவனுந்தான்,
என்றோ ஒருநாள் விட்டதினால்,
கொடுத்து உயர வளர்ந்திட்டான்;
குடும்பத்தோடு மகிழ்ந்திட்டான்.
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!
அடுத்து நிற்கும் குழந்தைகளின்
அழகிய முகத்தைக் கண்பாரும்.
படுத்து புரள்வதை விட்டுவிட்டு,
பாரதம் எழும்ப நீர் வாரும்!
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
![நற்செய்தி மாலை's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p370x247/11904726_992187607478708_2211960789634265991_n.jpg?oh=f16e5794f45e353b5695a8c0898c9c6b&oe=567E74EC)