நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை!
மதிப்பவர் சிலராய் இருந்தாலும்
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!
நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
“உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.”
நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள்
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.
நாள் முழுதும் கேட்பவர்கள்
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.
