முறுமுறுப்பார்!
நற்செய்தி: யோவான் 7:32-34.
நல்வழி:
அறவழி கூறும் இடங்களில் இன்று,
அறியார் பலரும் முறுமுறுப்பார்.
திறமிகு மாந்தர் அவரேயென்று,
தெய்வ வாக்கும் மறுதலிப்பார்.
குறை அறிவாரோ உணர்ந்து நின்று,
கிறித்துவை நோக்கி வேண்டிடுவார்.
நிறை வாழ்வளிக்கும் தெய்வம் ஒன்று,
நேர்மையில் நடத்தி ஆண்டிடுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.