வேளை வரவில்லை!
நல்வழி:
எத்தனையோ பேர் முயன்றிருந்தாலும்,
இயேசுவின் வேளை வரவில்லை.
அத்தனைத் துன்பம் அடைந்திருந்தாலும்,
ஆண்டவரும் பிடி தரவில்லை.
பித்தராய் நம்மைப் பார்த்திருந்தாலும்,
பிசாசின் வேலை எளிதில்லை.
இத்தனைக் கூறியும் ஏனினி அச்சம்?
இயேசு தருகிறார் தெளிவுநிலை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.