முன்னறிவிப்பு!
நற்செய்தி: யோவான் 12: 7-8.
7. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
8. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
நல்வாழ்வு:
எனது நடையின் அடுத்த நகர்வு,
எங்கே எப்படி என்றறியேன்.
தனது பணியின் இறுதி நிகழ்வை,
தலைவரே முன்னுரைத்தார்.
மனது வைத்து அருளுமாறு,
மண்டியிட்டு நானின்றேன்.
கனிவு இரக்கம் அன்பு காட்டி,
காலடியே என்றுரைத்தார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.