4. மீட்பின் திட்டம்!
பேர் புகழ் தேடிச் செல்வது சிறப்பா?
பேரிறை வழங்க, பெறுவது சிறப்பா?
யார் இதைப் புரிந்து நடக்கின்றாரோ,
ஊர் எனும் ஊரில் ஒருவர் இருந்தார்.
உள்ளம் முழுதும் பற்றாயிருந்தார்.
பார் படைத்தாளும் இறை அழைத்தார்;
பணிந்து ஆபிராம் கீழ்ப்படிந்தார்.
(தொடக்க நூல் 12:1-4).
