மழை வழி அடைத்ததால்…
வாழைப் பழத்தை உரித்துத் தின்று,
வழியில் தோலைப் போடுகின்றோம்.
நாளை அல்ல, இன்றே விழுவோம்,
என்பதை மறந்து ஓடுகின்றோம்.
ஏழை செல்வன் எனப் பார்க்காது,
இறங்கும் மழைவழி அடைத்துவிட்டோம்.
வேளை இதுவே, திருத்திக் கொள்வோம்.
விண்ணின் நேர்வழி நடந்திடுவோம்!
ஆமென்.
![நற்செய்தி மாலை's photo.](https://fbcdn-photos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-0/p235x350/12314075_1043502482347220_4186472463356625172_n.jpg?oh=76ac1508e126fa93276fbe61970a0270&oe=56E469A5&__gda__=1461690926_54119c7d49c46c9da8409fd0e7677b77)