பசாசும் பேசுகிறது!

பசாசும் பேசுகிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 5:6-8.

“அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார்.”

நற்செய்தி மலர்:

யார் இவர் என்று இயேசுவைப் பார்த்து,

ஏளனமாகக் கேட்பவரே,

பார் இவர், இறையின் மைந்தன் என்று,

பசாசு உரைப்பதும் கேட்பீரே.

மார் நிறை பற்று கொள்ளும்போது

மாற்றான் கூற்று தேவையில்லை.

நீர் இதையறிந்து, நேர்வழி வந்தால்,

நிம்மதிக்கென்றும் குறையுமில்லை!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply