நிரப்பும் ஆண்டவரே!

நல்வாழ்த்து:
அதிசய வாக்கால் அருளைப் பொழியும்
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.”

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும்
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:

அதிசய வாக்கால் அருளைப் பொழியும் 
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

"இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது."

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும் 
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக 
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.

Leave a Reply