நம்புவீர்!
இறை மொழி: யோவான் 20: 9-10.
9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
இறை வழி:
ஊனுடல் உயிர்ப்பை ஒவ்வார் இன்று,
உண்மை இல்லை என்கிறார்.
வானுடல் எடுத்து வாழ்வோமென்று,
வாய்மை மறந்து தின்கிறார்.
பேணுடல் தொழிலே பெரிதெனக் கொண்டு,
பிழைத்தால் எப்படி உண்ணுவார்?
நாணுவராகி, நலிவினைக் கண்டு
நம்பின், நன்மை எண்ணுவார்!
ஆமென்.
![May be an image of text that says 'He IS RISEN John 20:1-9'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/409492480_7156280371069370_4567222012172918310_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=vRt1oY8MwaEAX9NOuQU&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfBy0ivUThvXBaveuVyb-mRrA8qFIN8hW_Pi2VxdtnQ8MQ&oe=657A5B3C)