நம்புவீர்!
இறை மொழி: யோவான் 20: 9-10.
9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
இறை வழி:
ஊனுடல் உயிர்ப்பை ஒவ்வார் இன்று,
உண்மை இல்லை என்கிறார்.
வானுடல் எடுத்து வாழ்வோமென்று,
வாய்மை மறந்து தின்கிறார்.
பேணுடல் தொழிலே பெரிதெனக் கொண்டு,
பிழைத்தால் எப்படி உண்ணுவார்?
நாணுவராகி, நலிவினைக் கண்டு
நம்பின், நன்மை எண்ணுவார்!
ஆமென்.
