திருவட்டாறு நோக்கி….
பிறந்த ஊரைப் பிரிந்த நெஞ்சம்,
பித்தாய் மாறாதிருப்பதற்கு,
திறந்த கையுள் அணைத்துத் தஞ்சம்
தந்த சென்னை ஏதாகும்.
மறந்த என்னை புதுக்கக் கெஞ்சும்,
மனதை மகிழ்விப்பதற்கு,
பறந்து நானும் ஊரைக் கொஞ்சம்,
பாரேன் எனில் தீதாகும்!
-கெர்சோம் செல்லையா.