குற்றம் கண்டு பிடிப்பதே தொழில்!

​படைத்தவர் வாக்கு முடிக்கிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 3: 1-2
“அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.”
நற்செய்தி மலர்:
குற்றம் குறையைக் கண்டுபிடிக்கக்
கூட்டம் ஓன்று துடிக்கிறது.
மற்றோர் செய்யும் நன்மையைக்கூட 
மடமை என்று கடிக்கிறது!
வெற்றுவேட்டு வெடிப்பதைக் காட்ட 
வேலையற்றோரைப் பிடிக்கிறது.
பற்றினால்தான் நன்மை பிறக்கும்;
படைத்தவர் வாக்கு முடிக்கிறது!
ஆமென்.

Leave a Reply