காதிருந்தும்……

​நற்செய்தி மாலை: மாற்கு 4:9

‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.’
நற்செய்தி மலர்:
இரண்டு காதுகள் இருந்தபோதும்,
இறையின் வாக்கு கேட்கவில்லை.
முரண்டு பிடித்து முண்டியடித்தோம்;
முன்னேற்றத்தைக் காணவில்லை.
திரண்ட  செல்வம், பதவி புகழென 
தேடித் திரிந்தோம், அடையவில்லை.
மிரண்டு நிற்கையில் அவர் சொல் கேட்டோம்;
மீட்பரைத் தவிர விடையுமில்லை!
ஆமென்.

Leave a Reply