கடன்பட்டார்!

அன்புக் கடனா?
காசைக் கடனாய்க் கொடுத்துவிடு;
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!

தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!

-கெர்சோம் செல்லையா.

Photo: Try to follow - Bency

Leave a Reply