எல்லா நாளும் இறைவனின் நாளே!

 நற்செய்தி மாலை: மாற்கு 2:27-28.
“மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
எல்லா நாளும் இறைவனின் நாளே;
என்றும் எங்கும் பணிவோமே.
இல்லா ஏழைக்கிரங்கல்தானே,
இனியவர் ஊழியம் அணிவோமே.
செல்லாக் காசாய் கிடந்ததுபோதும்;
செய்தியை நன்மையில் சொல்வோமே.
பொல்லார் கூட வந்து கேட்பார்;
பொறுமையில் உலகை வெல்வோமே!
ஆமென்.

Leave a Reply