எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 3:3-4.
“இயேசு கை சூம்பிவரை நோக்கி, ‘ எழுந்து, நடுவே நில்லும் ‘ என்றார். பின்பு அவர்களிடம், ‘ ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ‘ என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
விதை விதைத்து விளைச்சல் அறுப்போம்.
வீணாய் வினைகள் விதைத்தல் வெறுப்போம்.
கதை வழியாய் உண்மைகள் கேட்போம்;
கருத்தை இழந்தவர் முடிவும் காண்போம்.
எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
என்றே எண்ணி நன்மை செய்வோம்.
இதை உரைக்கும் எளியவன் இவனும்,
எழுதிச் செல்லாதிருக்க வைப்போம்!
ஆமென்.![](https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=936ee8fe82&view=att&th=14b9085bf290d78f&attid=0.1&disp=safe&realattid=ii_i67bvjng0_14b9085bfce4be14&zw)