எதை விட்டோம், இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.
“பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.
அதனால் அவரும் அடியார் ஆனார்.
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!
ஆமென்.
